29 ஆவது முறையாக உடைந்து விழுந்த சென்னை விமான நிலைய கண்ணாடிக் கதவு!
சென்னை: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 29ஆவது முறையாக கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்ததால் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் கண்ணாடி கதவுகள் அமைக்கப்பட்டதிலிருந்து தொடர்ச்சியாக உடைந்து விழுகின்ற அவலம் நிகழ்ந்து வருகின்றது. இதை சரி செய்யவோ, இதுகுறித்துக் கவலைப்படவோ ஒரு நாதியும் இல்லை.
மீடியாக்கள் தொடர்ந்து இதுகுறித்து செய்தி வெளியிட்டபடிதான் உள்ளன. ஆனாலும் கொஞ்சம் கூட வெட்கமோ, பதட்டமோ இல்லாமல் இருக்கிறர்கள் சம்பந்தப்பட்டவர்கள்.
ஏற்கனவே 28 முறை கண்ணாடிக் கதவுகள் உடைந்து விழுந்துள்ள நிலையில், 29 ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தின் புறப்பாடு பகுதியில் அமைந்துள்ள கண்ணாடிக் கதவு உடைந்து விழுந்தது.
ஒன்றாம் எண் தானியங்கி கதவின் கண்ணாடி உடைந்து விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும் எத்தனை கண்ணாடி உடைவதற்காக காத்திருக்கிறார்களோ தெரியவில்லை!