சென்னை விமான நிலையத்தில் 68வது விபத்து... கழிவறை இடிந்து விழுந்து விமான பயணி படுகாயம்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 68வது முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது. விமான நிலையத்தில் உள்ள மேற்கத்திய கழிவறை இடிந்து விழுந்துள்ளது. இதில் மும்பை பயணிக்கு இடுப்பில் படுகாயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன.

இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. இங்கு இதுவரை 15 முறை மேற்கூரைகளும், 24 முறை தானியங்கி கண்ணாடி கதவுகளும், 20 முறை தடுப்பு கண்ணாடிகளும், 5 முறை சுவற்றில் பதிக்கப்பட்ட கிரானைட் கற்களும், ஒருமுறை விளக்கு கண்ணாடியும், ஒரு முறை அறிவிப்பு பலகை டி.வி.யும் உடைந்து விழுந்து உள்ளன. இவ்வாறு நடந்த 66 விபத்துகளில் 13 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
கடந்த வாரம் 67வது முறையாக பெரிய விபத்து ஏற்பட்டது. மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் புறப்பாடு மற்றும் வருகை பகுதிகளுக்கு பயணிகள் செல்ல லிப்ட் வசதி உள்ளது. இங்குள்ள முதல் தளம் பகுதியில் லிப்ட் அறையின் சுவற்றில் சலவை கற்கள் பதிக்கப்பட்டு உள்ளன.
2 அடி அகலமும் 7 அடி நீளமும் கொண்ட இந்த கற்களில் 5 கற்கள் திடீரென உடைந்து விழுந்தன. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தகவல் அறிந்ததும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
இன்று காலையில் 68வது விபத்து நிகழ்ந்துள்ளது. உள்நாட்டு முனையத்தில் மேற்கத்திய கழிவறை உடைந்து விழுந்துள்ளது. மும்பையில் இருந்து சென்னை வந்த பயணி, கழிவறைக்கு சென்றுள்ளார். சிறிது நேரத்தில் கழிவறை விழுந்து உடைந்தது. இதில் கீழே விழுந்த பயணிக்கு இடுப்பில் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பயணிக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கழிவறை இடிந்து விழுந்த சம்பவம் பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல ஆயிரம் கோடி செலவு செய்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுவது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகி வருகிறது. விரைவில் 100 விபத்து ஏற்பட்டு பலரும் போஸ்டர் ஒட்டி கொண்டாடினாலும் ஆச்சரியமில்லை.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications