3 மாதத்தில் 6வது முறையாக இடிந்து விழுந்த சென்னை ஏர்போர்ட் மேற்கூரை: பயணிகள் பீதி

சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள விமான நிலையத்தில் ரூ.2015 கோடி செலவில் நவீன வசதிகளுடன் கூடிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டன. இதை துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் துவங்கி வைத்தார்.
இந்த புதிய கட்டிடத்தில் உள்நாட்டு முனையம் முனையம் மட்டும் கடந்த மார்ச் மாதம் முதல் செயல்படத் துவங்கியது. கட்டிடத்தின் மேல் தளத்தில் புறப்பாடும், கீழ் தளத்தில் வருகை பகுதியும் உள்ளது. இந்நிலையில் புறப்பாடு பகுதியில் மதுரை, பெங்களூர், ஹைதராபாத் ஆகிய இடங்களுக்கு செல்லவிருந்த பயணிகள் நேற்று மாலை போர்டிங் பாஸ் வாங்க காத்திருந்தனர்.
அப்போது மேல் கூரை பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பயணிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்த விபத்தில் பயணிகள் யாரும் காயம் அடையவில்லை. இடிந்து விழுந்த மேல் கூரை பகுதி மட்டும் துண்டிக்கப்பட்டு அகற்றப்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் 20 நிமிடங்கள் போர்டிங் பாஸ் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் புதிய கட்டிடத்தின் மேற்கூரை கடந்த 2 மாதங்களில் மட்டும் 5 முறை இடிந்து விழுந்தது. இந்நிலையில் நேற்று 6வது முறையாக இடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications