For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருமணமான பெண்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு கண்.. காம டிரைவர் பரபர வாக்குமூலம்!

பெண்களை கத்திமுனையில் கற்பழித்த டிரைவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    திருமணமான பெண்களை குறி வைத்த டிரைவர் வாக்குமூலம்- வீடியோ

    சென்னை: "திருமணமான பெண்கள் மீது எனக்கு எப்பவுமே ஒரு கண் உண்டு, அவர்களை காரில் ஏமாற்றி கடத்தி சென்று காரிலேயே அவர்களை கற்பை சூறையாடிவிடுவேன்" - இப்படி ஒரு பகீர் வாக்குமூலத்தை கொடுத்துள்ளார் சுரேஷ் என்பவர்.

    நீலாங்கரை காவல்நிலையத்துக்கு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வந்தார். கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் நடமாடும் பெண்களை கால்டாக்சி ஓட்டும் டிரைவர் ஒருவர் ஏமாற்றி அவர்களை கடத்தி சென்று நாசம் செய்வதாக ரகசிய தகவலை சொன்னார். அத்துடன், தன்னையும் அதுபோலவே காரில் அழைத்து சென்று அந்த டிரைவர் பலாத்காரம் செய்து விட்டதாக கூறவும் போலீசார் அதிர்ந்தனர். புகாரை சொன்னவர், கூடவே அந்த டிரைவரின் கார் நம்பரையும் போலீசாரிடம் கொடுத்தார்.

     முக்கிய க்ளு

    முக்கிய க்ளு

    இப்படி ஒரு காரியத்தை செய்வது யார், இதுவரை எத்தனை பேரின் வாழ்வை பாழாக்கியிருப்பானோ என்று நினைத்த போலீசார், அந்த டிரைவரை தேடும் பணியில் ஈடுபட்டனர். அந்த பெண் கொடுத்த கார் நம்பர்தான் அவர்களுக்கு கிடைத்த முக்கியமான க்ளு.

     பகீர் வாக்குமூலம்

    பகீர் வாக்குமூலம்

    கிட்டத்தட்ட 2 வாரம் இதே வேலையாக போலீசார் தீவிரமாக இறங்கினர். பல நாள் திருடன் ஒருநாள் மாட்டுவான் என்பது மாதிரி போலீசார் கையில் சிக்கினார் டிரைவர். போலீசார் இப்போது தங்கள் பாணியில் விசாரணையை ஆரம்பித்தனர். அப்போது டிரைவர் சொன்ன வாக்குமூலத்தை கேட்டு போலீசார் ஆடிப்போயினர்.

     35 வயசு என்றால் பிடிக்கும்

    35 வயசு என்றால் பிடிக்கும்

    வாக்குமூலத்தில், "என் பேர் சுரேஷ். அடையாறு, திருவான்மியூர், கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வாடகைக்கு கால் டாக்சி ஓட்டுகிறேன். எனக்கு கல்யாணம் ஆன பெண்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அவர்கள் மேல ஒரு கண்ணு. அதுவும் 35 வயசிலிருந்து 40 வரை பெண்கள் என்றால் இன்னும் ஆசை. அப்படிப்பட்டவர்கள் ரோட்டில் தனியாக போனால், நைசா பேச ஆரம்பிப்பேன்.

     பட்டுப்புடவை ஆசை

    பட்டுப்புடவை ஆசை

    என்னை நம்பும்வரை அப்படி நைசாவே பேசுவேன். பேச்சு கொடுப்பேன். "என் முதலாளி சுமங்கலி பூஜை நடத்துறார். அந்த பூஜையில பட்டுப்புடவையும், 10 ஆயிரம் ரூபாய் பணமும் தர்றார். அவர் வீடு பக்கத்துலதான் இருக்கு என்று சொல்வேன். பட்டுப்புடவை, ரூ.10 ஆயிரம்-னு சொன்னதும் அதுக்கு ஆசைப்பட்டு ஈசியா பெண்கள் வந்து என் கார்ல ஏறிடுவாங்க. இல்லாட்டி, ஏதாவது செய்து காரில் ஏற்றி விடுவேன். பிறகு ஒதுக்குப்புறமான இடத்தில் வண்டியை நிறுத்துவேன். கார் கண்ணாடியை ஏத்தி விட்டுருவேன். ஏசி-யையும் ஃபுல்லா போட்டு விட்ருவேன்.

     மிரட்டி நகை வாங்குவேன்

    மிரட்டி நகை வாங்குவேன்

    பிறகு ஜாலியாக இருக்க ஆரம்பிப்பேன். அப்போது அவர்கள் சத்தம் போட்டால் மிரட்டுவேன். சில பேர் பயந்துட்டு சத்தம் போட மாட்டாங்க. சிலர் சத்தம் போட்டாலும் அந்த ஏசி சத்தத்துல அது வெளியில கேக்காது. இந்த மாதிரி ஒரு வருஷத்துல மட்டும் 10 பேரை இதுபோல மிரட்டி பணிய வச்சிருக்கேன். கூடவே அவங்க நகை போட்டிருந்தா அதையும் மிரட்டி வாங்கிப்பேன். அப்புறம் அவங்கள கூட்டிட்டு போய் பாதி வழியிலயே இறக்கி விட்டுருவேன்" என்று வாக்குமூலம் அளித்தார்.

     புத்திமதி சொல்ல முடியுமா?

    புத்திமதி சொல்ல முடியுமா?

    இதையடுத்து சுரேஷை கைது செய்த போலீசார், கற்பழிப்பு வழிப்பறி, கொலை மிரட்டல் உட்பட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். இளம் பெண்கள் என்றால் அறிவுரை சொல்லலாம். ஆனால் 35 வயது தாண்டிய பெண்களுக்கும், அதுவும் பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்டு காரில் ஏறிய பெண்களுக்கெல்லாம் என்னத்த சொல்ல?

    English summary
    Chennai Call Taxi Driver Suresh statement 10 women molestation
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X