பள்ளி வளாகங்களில் மழைநீரை தேங்க விட வேண்டாம் - சென்னை ஆட்சியர் உத்தரவு
அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்காமல் பராமரிக்க வேண்டும் என சென்னை மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள அனைத்து பள்ளி முதல்வர்கள், தலைமை ஆசிரியர்கள், தாளாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் பிறப்பித்த உத்தரவு:

அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மழை நீர் தேங்காதவாறு பராமரிக்க வேண்டும். மழைநீர் தேங்காதவாறு நிரந்தர வழிவகை ஏற்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.
தொற்று நோய் ஏற்படாதவாறு மாணவர்கள் நலனில் அக்கறையுடன் செயல்பட வேண்டும். பள்ளி கல்வி அதிகாரிகள் சுகாதார பணியாளர்கள் கொண்ட குழு பள்ளிகளில் பணியை நேரில் ஆய்வு செய்வார்கள்.
பள்ளி வளாகங்களை பராமரிக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அன்பு செல்வன் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications