தமிழகத்தில் சென்னை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை
சென்னை: வங்கக் கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தில் சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தென்மேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் இன்று தமிழகத்தில் பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சென்னை, கடலூர், நாகைபட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர்,கிருஷ்ணகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது
இந்த நிலையில் சென்னையில் சில இடங்களில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. கிண்டி, துரைபாக்கம், ஈக்காட்டுத்தாங்கல், போரூர், நந்தம்பாக்கம்,சூளைமேடு, வடபழனி, கோயம்பேடு, விருகம்பாக்கம்,சோழிங்கநல்லூர்,உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் தற்போது மழைநீர் வடிந்து வருகிறது. சில பகுதிகளில் மட்டும் இன்னும் மழைநீர் வடியாமல் தேங்கி கிடக்கிறது. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக தமிழ்நாட்டில் வெயில் அடித்தது. மக்கள் வெள்ள பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றனர்.
சென்னையில் தற்போது மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளதால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.












Click it and Unblock the Notifications