சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு.. இடுப்பில் வைத்து 4 கோடி மதிப்புள்ள தங்கம் கடத்திய பெண் கைது
சென்னை விமானநிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்புள்ள 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

சென்னை விமான நிலையத்தில் பெண்ணிடம் 13 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை துபாயில் இருந்து வந்த விமானத்தில் வந்த பெண் ஒருவரின் நடவடிக்கை சந்தேகம் அளிக்கும் விதத்தில் இருந்ததால், சுங்கத்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது அந்த பெண்ணை பரிசோதித்தபோது, அவரது உடையின் இடுப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 25 தங்க செயின்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தீவிர சோதனையில், மொத்தம், 4 கோடி ரூபாய் மதிப்பிலான 13 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பத்மா என்கிற அந்தப் பெண் சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications