ஸ்ரீரங்கத்தில் பிரச்சாரத்தில் ஹார்ட் அட்டாக்... சென்னை திமுக கவுன்சிலர் மரணம்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது, திமுக கவுன்சிலர் ரவி என்பவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.
ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதிக்கு வரும் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் வேட்பாளர்களும், கட்சிப் பிரமுகர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் 82வது வார்டு கவுன்சிலரான சு.ரவி, திமுக வேட்பாளருக்கு ஆதரவாக, ஸ்ரீரங்கம் பகுதியில் தங்கி பிரச்சாரம் செய்து வந்தார். வழக்கம் போல இன்று காலை 11 மணியளவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, திடீரென ரவிக்கு மாரடைப்பு ஏற்பட்டது.
உடனடியாக அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு திமுக தொண்டர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது திமுக கவுன்சிலர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவத்தால், திமுக தொண்டர்கள் சோகமும், அதிர்ச்சியும் அடைந்தனர்.












Click it and Unblock the Notifications