விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு: சென்னையில் அவசரமாக தரை இறங்கியது
சென்னை: வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண்ணுக்கு வலிப்பு வந்த காரணத்தினால் கோலாலம்பூர் சென்ற விமானம் அவசரமாக சென்னையில் தரை இறங்கியது.
மஸ்கட்டில் இருந்து கோலாலம்பூருக்கு சென்னை வழியாக ஒமன் ஏர்வேஸ் விமானம் நேற்றிரவு புறப்பட்டு சென்றது. அந்த விமானம் அதிகாலை 5 மணியளவில் சென்னை வான் எல்லையை கடந்து சென்றது.
அப்போது ரெவிமார்ட் டினி என்ற பெண்ணுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. மூளையில் ஏற்பட்ட அடைப்பினால் அவருக்கு வலி உண்டாகி கதறினார்.
இதனால் விமானத்தை சென்னையில் தரை இறக்க விமானிகள் முயற்சி செய்தனர். சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து மேலாளர் சரவணன் அவசர நடவடிக்கைகளை மேற் கொண்டார். அந்த விமானத்தை தரை இறக்க அனுமதியளிக்கப்பட்டது.
விமான நிலையத்தில் மருத்துவ குழுவும் தயார் நிலையில் ஆம்புலன்சுடன் காத்து நின்றனர். விமானம் சென்னையில் தரை இறங்கியதும் அந்த பெண் பயணியை ஸ்டெச்சரில் வைத்து வெளியே கொண்டு வந்தனர். அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் முதல் கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அவரது கணவர் நூருதீன் உடன் இருந்து கவனித்து வருகிறார்.












Click it and Unblock the Notifications