விடிய விடிய கொட்டிய மழை.. ஃபேன் கூட போட முடியாத அளவுக்கு குளிர்.. ஏசி மோடில் சென்னை..!!
சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் மாநகர் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
Recommended Video

சென்னை: சென்னையில் விடிய விடிய கொட்டிய மழையால் மாநகர் முழுவதும் குளிர்ச்சி நிலவி வருகிறது.
சென்னையில் கடந்த வாரம் வரை கடுமையான வெயில் நிலவி வந்தது. இதனால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் அவதியடைந்தனர்.
இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

விடிய விடிய
தொடர்ந்து மூன்று நாட்களாக இரவு நேரங்களில் தொடங்கும் மழை விடிய விடிய கொட்டித் தீர்க்கிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான சூழல் நிலவி வருகிறது.

ஏசி மோடில் சென்னை
நேற்றிரவு முதல் கொட்டிய மழையால் சென்னை மாநகர் முழுவதும் சில்லென மாறியுள்ளது. நகர் முழுவதும் ஏசியை ஆன் செய்தது போல் உள்ளது.

ஃபேன் கூட போட முடியவில்லை
இதனால் இரவு முதல் ஃபேன் கூட போட முடியாத அளவுக்கு கடுமையான குளிர் நிலவி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் இப்படி ஒரு இதமான சூழல் தற்போது நிலவி வருகிறது.

தலைகீழாக மாறியுள்ளது
சென்னையின் அடையாளமே வியர்வை, வெயில், வெப்பம், தகிப்பு உள்ளிட்டவைதான். இந்நிலையில் இந்த 3 நாள் மழை சென்னையின் அடையாளத்தை தலைகீழாக மாற்றிப்போட்டுள்ளது.












Click it and Unblock the Notifications