சென்னை வங்கிக் கட்டிட தீ விபத்து... 40 ஊழியர்களின் உயிரைக் காப்பாற்றிய உதவி மேலாளர்!
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் பெருத்த உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருந்ததற்கு, வங்கியின் உதவி மேலாளர் ஒருவர் தான் முக்கியக் காரணமாக இருந்துள்ளார். கட்டிடத்தில் தீ பற்றியதாக அவர் முதலில் அளித்த எச்சரிக்கையின் அடிப்படையிலேயே மற்ற ஊழியர்கள் கட்டிடத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
நேற்று மதியம் சென்னை பாரிமுனையில் உள்ள 200 ஆண்டுகள் பழமையான எஸ்.பி.ஐ வங்கிக் கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. சனிக்கிழமை மதிய வேளையாகையால் பணி முடிந்து வங்கி ஊழியர்கள் வீட்டிற்கு சென்று விட்டனர்.

ஆனபோதும், 2-வது மாடியில் உள்ள ஒரு அறையில் நேற்று மதியம் வங்கி ஊழியர்கள் சங்க கூட்டம் நடைபெற இருந்ததால், அங்கு மட்டும் பிற வங்கிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கூடி இருந்தனர்.
கட்டிடத்தில் தீப்பற்றிய தகவலை அவர்களுக்கு கூறி, அவர்களை கட்டிடத்தில் இருந்து வெளியேற கூறியுள்ளார் ‘பாரத ஸ்டேட்' வங்கி ஆதி திராவிடர் பழங்குடியினர் ஊழியர்கள் பொதுநலச்சங்க தலைவரும், நுங்கம்பாக்கம் பாரத ஸ்டேட் வங்கியின் உதவி மேலாளருமான முருகன் என்பவர். இதனால் தான் பெருத்த உயிர்ச்சேதம் தவிர்க்கப் பட்டது.
இது தொடர்பாக முருகன் கூறுகையில், ‘நான் சங்க பணியின் காரணமாக விபத்து நடைபெற்ற கட்டிடத்தின் முதல் தளத்தில் அமர்ந்திருந்தேன். அப்போது திடீரென்று புகை வந்தது. உடனே சென்று பார்த்தபோது தீ மளமளவென எரிந்துகொண்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். உடனே கட்டிடத்தில் உள்ள கேன்டின், 2-வது தளத்தில் யாரேனும் இருக்கிறார்களா என்று ஓடிச் சென்று பார்த்தேன். தீ, தீ.. உடனே அனைவரும் வெளியேறுங்கள் என்று கூறியபடி ஓடினேன். இதனால் தீ விபத்தில் சிக்காமல் 40 பேர் வெளியே ஓடி வந்துவிட்டனர்" எனத் தெரிவித்தார்.
விபத்து நடைபெற்ற வங்கிக்கு எதிரே, செல்போன் கடை நடத்தி வரும் அசார் என்பவர் விபத்துக் குறித்துக் கூறுகையில், "நான் வழக்கம் போல் கடையில் இருந்தேன். அப்போது 3.15 மணி அளவில் திடீரென்று வங்கி அலுவலகத்தில் இருந்து குபுகுபுவென கரும்புகை வெளியேறியது.
உடனே தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தேன். 15 நிமிடத்தில் தீயணைப்பு படையினர் வந்து தீயை அணைக்க தொடங்கினர். இறைவன் கருணையால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏற்படவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications