For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடான சென்னை! ஊர்ந்து சென்ற வாகனங்களால் டிராபிக் ஜாம்

By Veera Kumar
Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னையில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை-வீடியோ

    சென்னை: அரை மணி நேர மழைக்கே வெள்ளக்காடாகியது சென்னை. இதனால் பொதுமக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

    சென்னையிலும், புற நகர் பகுதிகளிலும், இன்று பிற்பகல் முதல் கன மழை கொட்டியது. சில பகுதிகளில் மிதமாக இருந்த மழை சில பகுதிகளில் நன்கு வெளுத்து வாங்கியது.

    Chennai flooded for just a half an hour rain

    இந்த திடீர் கோடை மழையால், சென்னையின், எழும்பூர், அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் வெள்ளம் ஏற்பட்டது. மழை, வெள்ளம் காரணமாக பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    Chennai flooded for just a half an hour rain

    எழும்பூரில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் எதிரே வெள்ளத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வேப்பேரி ஈவிகே சம்பத் சாலையிலும் வாகனங்கள் வெள்ளத்தில் தத்தளித்தபடி சென்றன.

    அரை மணி நேரம் பெய்த மழைக்கே சென்னை தத்தளித்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மழைக்காலத்திற்கு முன்பே வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த கோடை மழை அரசுக்கு உணர்த்தியுள்ளது.

    English summary
    Chennai flooded for just a half an hour rain. This caused the public to suffer.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X