பேத்தி வயது சிறுமியை சீரழித்த முதியவர்.. சென்னை சிறுமி பலாத்கார விவகாரத்தில் வெளியான அதிர்ச்சி தகவல்
சென்னை சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 66 வயது முதியவரான லிப்ட் ஆபரேட்டரே முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.
Recommended Video

சென்னை: அயனாவரம் சிறுமி பாலியல் பலாத்கார விவகாரத்தில் 66 வயது முதியவரான லிப்ட் ஆபரேட்டரே முதலில் சிறுமியை பலாத்காரம் செய்தது அம்பலமாகியுள்ளது.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பெற்றோருடன் வசித்து வந்த மாற்றுத்திறனாளி சிறுமியை அங்கு பணிபுரியும் லிப்ட் ஆபரேட்டர், எலக்ட்ரிஷியன், பிளம்பர் என 15 பேர் பலாத்காரம் செய்ததாக சிறுமியின் தாயார் நேற்று போலீஸில் புகார் அளித்தார்.
வாய் பேச முடியாத காது கேளாத அந்த சிறுமிக்கு மயக்க ஊசி போட்டும், போதை ஊசி போட்டும் அந்த கும்பல் இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பான காலி சிரஞ்சுகளையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

லிப்ட் ஆபரேட்டர் திட்டம்
11 வயது சிறுமி பள்ளிக்கு போகும்போது லிப்ட்டை பயன்படுத்தியுள்ளார். அப்போது பழக்கமான லிப்ட் ஆபரேட்டர் சிறுமியை பலாத்காரம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

66 வயது முதியவர் ரவிக்குமார்
அதன்படி சிறுமி வீட்டில் யாரும் இல்லாத போது அவரை மொட்டைமாடி, லிப்ட், டாய்லேட், ஜிம் என மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து சீரழித்துள்ளார். அந்த லிப்ட் ஆபரேட்டருக்கு வயது 66. பெயர் ரவிக்குமார்.

பேத்தி வயதுடைய சிறுமி
பேத்தி வயதுடைய அந்த சிறுமியை சின்னாபின்னமாக்கியதோடு அவரை ஆபாசமாக தனது செல்போனில் படம் பிடித்து நினைத்தபோதெல்லாம் வீடியோவை காண்பித்து சிறுமியை சீரழித்துள்ளார்.

கூட்டாளிகளுக்கும்
மேலும் அங்கு பணிபுரியும் பிளம்பர் உட்பட தனது சகாக்களிடமும் அந்த வீடியோவை காண்பித்து வக்ரமாக ரசித்த முதியவர் ரவிக்குமார், சிறுமியை வீடியோவை காண்பித்து மிரட்டியும் கொன்று விடுவதாக கத்தி முனையில் மிரட்டியும் கூட்டாளிகளுக்கு விருந்தாக்கியுள்ளார்.

நீதிபதி விசாரிப்பு
சிறுமி மறுத்தபோது அவரை கத்தியால் கழுத்தில் கீறியுள்ளனர். அந்த காயமும் சிறுமியின் கழுத்தில் இருந்துள்ளது. இதுதொடர்பாக மகிளா நீதிமன்ற நீதிபதி சிறுமியிடம் விசாரணை நடத்தினார்.

தடயவியல் சொதனை
மேலும் சிறுமிக்கு மயக்க மருந்து மற்றும் போதை மருந்து செலுத்த பயன்படுத்தப்பட்ட காலி சிரஞ்சுகளை கைப்பற்றியுள்ள போலீசார் அவற்றை தடயவியல் சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.

மரண தண்டனை கோரிக்கை
17 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இதுதொடர்பாக 8 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 11 வயதேயான சிறுமி, அதுவும் மாற்றுத்திறனாளி சிறுமி என்ற இரக்கம் கூட இல்லாமல் இந்த காட்டுமிராண்டித்தனத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications