சென்னை, புதுவையில் 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்குமாம்... எச்சரிக்கும் வானிலை மையம்
சென்னை: சென்னை மற்றும் புதுச்சேரியில் 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் இன்று கூறுகையில், தமிழகத்திலும், புதுவையிலும் தற்போது அடித்து வரும் வெயில் நீடிக்கும். சென்னையிலும் 100 டிகிரி பாரன்ஹீட் அளவிலான வெயில் தொடரும்.
சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் 100 டிகிரி அளவுக்கு வெயில் கொளுத்தும். சென்னை மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு வெயில் உக்கிரமாகவே இருக்கும்.

மேற்கிலிருந்து பலத்த தரைக்காற்று வீசுகிறது. அதேபோல கடல் காற்று வீசுவதும் தாமதமாகிறது. இதனால்தான் வெயில் அதிகமாக உள்ளது.
அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம்.
சென்னையைப் பொறுத்தவரை மழைக்கு வாய்ப்பில்லை. அதேசமயம், இடி மேகங்கள் மட்டும் உண்டாகும் என்றும் வானிலை மையத் தகவல் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications