இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
இயக்குநர் கவுதமனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை: இயக்குநர் கவுதமனை நிபந்தனை ஜாமீனில் விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் கொதிப்பில் இருந்து வந்த நிலையில் சென்னையில் ஐபிஎல் போட்டிகளை நடத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஏப்ரல் 10ம் தேதி சென்னையில் மிகப் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கானோர் திரண்டு அண்ணா சாலையில் போராட்டம் நடத்தினர்.
காவிரி பிரச்சினையை மறக்கடிக்கவே இந்த போட்டிகள் நடத்தப்படுவதாக குற்றம்சாட்டிய அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து அதையும் மீறி போட்டிகள் நடத்தப்படும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்ததால் போராட்டம் வெடித்தது. அண்ணா சாலை முழுவதும் மக்கள் எழுச்சியுடன் குவிந்தனர்.
இதில் பாரதிராஜா, சீமான், அமீர், கவுதமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிலையில் அண்ணா சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தியதாக கடந்த ஜூன் 24-ஆம் தேதி திருவல்லிக்கேணி போலீஸார் இயக்குநர் கவுதமனை திடீரென கைது செய்தனர்.
இதையடுத்து இயக்குநர் கவுதமன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விசாரித்தார். அரியலூரில் தங்கி இருக்க வேண்டும் என்ற நிபந்தையுடன் கவுதமனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.