தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்... நீதிபதி கிருபாகரன் அதிரடி
தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகாசியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் ஆந்திரம் மாநிலம், சித்தூரில் உள்ள ராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் 6 மாத பேறு கால விடுப்பு எடுத்ததை கருத்தில் கொள்ளாமல் தன்னை தொடர்ந்து பணியாற்ற ஆரம்ப சுகாதார நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் முதுநிலை படிப்பில் தன்னால் சேரமுடியவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில் பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால விடுப்பு என்பதையும் ஏன் கட்டாயமாக்கக் கூடாது.குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து கிருபாகரன் கூறுகையில், பேறு கால விடுப்பு காலத்தை தமிழகம் உயர்த்தியதை போன்ற மற்ற மாநிலங்களும் உயர்த்த நடவடிக்கை தேவைப்படுகிறது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை என ஏன் நீதிமன்றம் அறிவிக்கக் கூடாது. தாய்ப்பால் ஊட்டச்சத்து மட்டுமின்றி மார்பக புற்றுநோயை தடுக்கும் என்பதை ஏன் உணர்த்த கூடாது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications