தாய்ப்பால் கொடுப்பதை கட்டாயமாக்க வேண்டும்... நீதிபதி கிருபாகரன் அதிரடி
தாய்ப்பால் கொடுப்பதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை : பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது என்று நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சிவகாசியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா. இவர் ஆந்திரம் மாநிலம், சித்தூரில் உள்ள ராஜபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பயிற்சி மருத்துவராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவர் 6 மாத பேறு கால விடுப்பு எடுத்ததை கருத்தில் கொள்ளாமல் தன்னை தொடர்ந்து பணியாற்ற ஆரம்ப சுகாதார நிர்வாகம் கட்டாயப்படுத்துவதாகவும் இதனால் முதுநிலை படிப்பில் தன்னால் சேரமுடியவில்லை என்றும் சென்னை ஹைகோர்ட்டில் அவர் வழக்கு தொடுத்தார்.

அந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். அப்போது அவர் கூறுகையில் பேறு கால விடுப்பு காலகட்டத்தில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதை ஏன் கட்டாயமாக்கக் கூடாது. 2 குழந்தைகளுக்கு மட்டுமே பேறு கால விடுப்பு என்பதையும் ஏன் கட்டாயமாக்கக் கூடாது.குழந்தைகளுக்கான உணவுப்பொருள் விளம்பரப்படுத்துதல் தடை சட்டம் முறையாக அமல்படுத்தப்படுகிறதா என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.
இதைத் தொடர்ந்து கிருபாகரன் கூறுகையில், பேறு கால விடுப்பு காலத்தை தமிழகம் உயர்த்தியதை போன்ற மற்ற மாநிலங்களும் உயர்த்த நடவடிக்கை தேவைப்படுகிறது. பணிக்கு செல்லும் பெண்களுக்கு தாய்ப்பாலின் மகத்துவத்தை ஏன் விளம்பரப்படுத்தக் கூடாது.
தாய்ப்பால் குழந்தைகளுக்கான அடிப்படை உரிமை என ஏன் நீதிமன்றம் அறிவிக்கக் கூடாது. தாய்ப்பால் ஊட்டச்சத்து மட்டுமின்றி மார்பக புற்றுநோயை தடுக்கும் என்பதை ஏன் உணர்த்த கூடாது. இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் வரும் 22-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று கிருபாகரன் உத்தரவிட்டுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications