திருமுருகன்காந்தி மீதான பிடிவாரண்டை ரத்து செய்தது ஹைகோர்ட்!
Recommended Video

சென்னை: மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை ஹைகோர்ட் ரத்து செய்தது.
இலங்கை தமிழர் படு கொலையில் சர்வதேச விசாரணை தேவை என மே 17 இயக்கத்தினர், மதிமுக உள்ளிட்டோர் போராடி வந்தனர். இந்நிலையில் உள்நாட்டு விசாரணையே போதும் என்று அமெரிக்கா கூறிவிட்டது.

இதை கண்டித்து கடந்த 2014 மற்றும் 2016-ஆம் ஆண்டுகளில் சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகம் முற்றுகை போராட்டம் நடந்தது. இதில் மே 17 இயக்கத்தினர், மதிமுக பொதுச் செயலாளர வைகோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விசாரணைக்கு திருமுருகன் காந்தி ஆஜராகாததால் அவர் மீது பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் திருமுருகன் காந்தி மீதான பிடிவாரண்டை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது உள்ளது. ஐ.நா. சபை கூட்டத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து பேசிவிட்டு நாடு திரும்பிய போது திருமுருகன்காந்தி கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் உள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications