ஸ்ஸ்ஸ்ஸப்பா என்னா வெயிலு... சென்னையில பிச்சுகிட்டு போகும் நுங்கு, இளநீர் விற்பனை!
சென்னையில் வாட்டி வதைக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க உடலுக்கு குளிர்ச்சியூட்டும் இளநீர், நுங்கு உள்ளிட்ட பொருட்களை மக்கள் அதிகம் நாடி வருகின்றனர்.
சென்னை : சென்னை நகரம் பகல்வேளையில் கடும் வெயிலின் தாக்கத்தால் நரகமாக மாறி வருகிறது. சுள்ளென்று மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க உடலுக்கு குளிர்சியூட்டும் இயற்கைப் பொருட்களை மக்கள் அதிகம் நாடுவதால் இளநீர், நுங்கு உள்ளிட்டவற்றின் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
சென்னையில் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பே வெயில் போட்டு தாக்கி வந்தது. இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும் அக்னி நட்சத்திரம் 28ம் தேதியுடன் முடிகிறது. ஆனால் கழிவிடை நாள் என்று சொல்வது போல கடைசி வாரமான இந்த வாரம் சென்னையில் கடுமையான வெயில் இருக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கணிக்கின்றனர்.
பகல் வேளையில் கானல் நீரை போர்த்தி தார் சாலைகளில் தகிக்கும் வெயில் வாகன ஓட்டிகளின் முகத்தில் நெருப்பை வாரி வீசுகிறது. வெப்பத்தில் இருந்து தப்பிக்க சென்னை மக்கள் இயற்கைப் பொருட்களான இளநீர், நுங்கு, பதநீர் உள்ளிட்டவற்றை அதிகம் நாடுகின்றனர். உடல் சூட்டை தணிக்கும் இந்த பொருட்களுக்கு இருக்கும் மவுசு காரணமாக சென்னை நகர சாலையோரங்களில் புதுப்புது கடைகள் முளைத்திருக்கின்றன.

மொய்க்கும் மக்கள்
சென்னையின் பிரதான பகுதிகளான மாதவரம், மூலக்கடை, பெரம்பூர், அயனாவரம், கீழ்ப்பாக்கம், திருமங்கலம் உள்ளிட்ட நகரின் பெரும்பாலான இடங்களில் சாலையோரங்களில் முளைத்திருக்கும் கடைகளில் மக்கள் ஈக்களென மொய்த்து உடல் சூட்டை தணிக்கும் பொருட்களை வாங்கி ருசித்து செல்கின்றனர்.

கிடுகிடு விலை
கடந்த ஆண்டு ஒரு டஜன் நுங்கு ரூ.30க்கு விற்கப்பட்ட நிலையில், புயல், வறட்சி காரணமாக விளைச்சல் இல்லாத காரணத்தாலும் மரம் ஏற ஆட்கள் கிடைக்காததாலும் இந்த ஆண்டு நுங்கு விலை ரூ.50க்கும், இளநீரின் அடிப்படை விலையே ரூ. 35 முதல் ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் பதநீர்
இதே போன்று கிராமங்களில் ரசித்து ருசித்த பதநீர் விற்பனையும் சென்னையில் பட்டைய கிளப்புது. மாதவரம் பகுதியில் உள்ள பனைமரங்களில் இருந்து இறக்கப்படும் பதநீர் 250 மில்லி ரூ. 15க்கு விற்பனை செய்யப்படுகிறது.

குட்பை டூ கூல்டிரிங்ஸ்
எனினும் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு குட்பை சொன்ன சென்னை நகரத்து வாசிகளின் கவனம் இயற்கை பக்கம் திரும்பியிருப்பதால் எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை என்று பதநீர், இளநீர் உள்ளிட்டவற்றை வாங்கி ஒரு மடக்கு குடித்து விட்டு ஜில்லென்ற சந்தோஷத்துடன் புறப்பட்டு செல்கின்றனர்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications