நடிகர் கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கு.. ஒரு வாரத்தில் பதிலளிக்க அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவு!
நடிகர் கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடிகர் கமல்ஹாசனுக்கு எதிரான வழக்கில் ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் தொடர்பான கருத்துக்களை கூறியும் அரசு குறித்து விமர்சித்தும் அனலை கிளப்பி வருகிறார். அண்மையில் வார இதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கமல் இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக நடிகர் கமல் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவிட கோரி தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் நடிகர் கமல் மீது புகார் அளித்தும் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது இதுகுறித்து தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications