போக்குவரத்து தொழிற்சங்க வழக்கு விசாரணை பிற்பகலுக்கு ஒத்திவைப்பு

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான வழக்கு மீது இன்று விசாரணை செய்யப்பட இருக்கிறது.

Subscribe to Oneindia Tamil

சென்னை:போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிரான வழக்கு மீது இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் கடந்த 4-ந் தேதியில் தமிழகம் முழுக்க போராட்டம் செய்து வந்தனர். ஊதிய உயர்வு உட்பட 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி இவர்கள் போராடுகிறார்கள். போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்தம் தற்போது முடிவிற்கு வரும் நிலையில் இருக்கிறது.

Chennai High Court hears petitions on TN Bus strike

இந்த நிலையில் இந்த வேலை நிறுத்தத்திற்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. சென்னை உயர்நீதி மன்றத்தில் நீதிபதிகள் மணிக்குமார், கோவிந்தராஜ் அமர்வில் இன்று விசாரணை நடத்தப்படும்.

நேற்றைய விசாரணையில் தமிழக அரசின் 2.44 சதவீத இடைக்கால ஊதிய உயர்வை ஏற்க சங்கம் ஒப்புக் கொண்டது. போக்குவரத்து சங்கங்கள் ஜனவரி 4-ஆம் தேதி தமிழக அரசு போட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரியது. இதனால் போராட்டம் நேற்றே முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஊழியர்கள கோரிக்கை வைத்தனர். இதனால் இன்று பல பணியாளர்கள் பணிக்கு திருமப மாட்டார்கள். இதன் மீதான விசாரணை இன்று பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+