எச். ராஜா விவகாரம்.. அரசு தலைமை வழக்கறிஞருக்கு அதிகாரம் இல்லை.. ஹைகோர்ட் அதிரடி!
எச் ராஜா விவகாரத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் வரும் 8ஆம் தேதி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Recommended Video
சென்னை: எச் ராஜா விவகாரத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் வரும் 8ஆம் தேதி விளக்கம் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புதுக்கோட்டை அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பாஜக தேசிய செயலளார் எச் ராஜா நீதிமன்றத்தை தரக் குறைவாக பேசியதாக அவர் மீது அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி வழக்கறிஞர் கண்ணதாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை ஏற்று எச். ராஜாவுக்கு அரசு வக்கீல் உத்தரவிட்டார். அக்.3ம் தேதி நேரில் ஆஜராக எச். ராஜாவுக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.
[ கள்ளக்காதலர்களே.. அதான் பச்சைக் கொடி காட்டியாச்சுல்ல.. இன்னும் ஏன் கொலை பண்றீங்க.. அடங்குங்க! ]
இந்நிலையில் இவ்வழக்கு பற்றி கருத்து கூறிய நீதிபதி மகாதேவன், நீதிமன்ற அவமதிப்பாளரை அழைத்து விளக்கம் கேட்க அரசு தலைமை வக்கீலுக்கு அதிகாரம் இல்லை என்றார். மேலும் எச். ராஜா விவகாரத்தில் அரசு தலைமை வக்கீல் அக். 8ம் தேதி விளக்கம் தர வேண்டும் என்றும் நீதிபதி மகாதேவன் உத்தரவிட்டார்.