ஈஷா மையத்திற்கு எதிரான வழக்கு: அரசு பதிலளிக்க ஜூன் 8ஆம் தேதி வரை அவகாசம்!
வனப்பகுதிகளை சூறையாடி ஈஷா மையம் கட்டடங்களை கட்டியதாக வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் தொடர்ந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதி வரை அரசுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: வனப்பகுதிகளை சூறையாடி ஈஷா மையம் கட்டடங்களை கட்டியதாக வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் தொடர்ந்த வழக்கு ஜூன் 8ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
வெள்ளியங்கிரி மலைவாழ் பழங்குடியினர் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையத்துக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. அதில் வெள்ளியங்கிரி மலையில் 112 அடி ஆதியோகி சிவன் சிலை அமைப்பதற்காக வனப்பகுதியில் நிலம் சட்டவிரோதமாக ஆக்கிர மிக்கப்பட்டுள்ளது.

அந்த நிலத்தில் எவ்வித அனுமதியுமின்றி கட்டு மானங்கள் கட்டப்படுகின்றன. எனவே புதிதாக கட்டுமானங்கள் கட்டுவதற்கு தடை விதிக்க வேண் டும். அத்துடன், ஏற்கெனவே அத்து மீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க உத்தரவிட வேண்டும் கோரியிருந்தனர்.
இதற்கு கோவை மண்டல நகரமைப்பு திட்டமிடல் துறை மட்டும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கோவை மாவட்ட ஆட்சியர், தமிழக அரசின் பிற துறைகள் மற்றும் ஈஷா மையம் ஆகியவை இன்னும் பதிலளிக்கவில்லை.
எனவே ஈஷா மையம் உள்ளிட்ட பிற எதிர்மனுதாரர்களும் பதிலளிக்கும் வகையில் விசாரணையை தள்ளி வைப்பதாக கூறிய ஹைகோர்ட் அதற்குள் மத்திய, மாநில அரசுகள் சார்பிலும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி மற்றும் சுந்தர் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
வெள்ளிங்கிரி பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் புருசோத்தமன், வழக்கறிஞர் கலையரசன், வழக்கறிஞர் பன்னீர் செல்வம் ஆகியோர் ஆஜரானார்கள்.
விசாரணையின் போது அரசு தரப்பில் பதில் அளிக்க கால அவகாசம் கேட்டதால் ஜூன் 8ம் தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் ஈஷா மையம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள 112அடி உயர ஆதியோகி சிலையியை பிரதமர் மோடி திறந்து வைத்தார் என்பது குறிப்பிடத்க்கக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications