சென்னையில் உஸ் உஸ் காற்றுடன் ஜில் ஜில்... கூல் கூல் மழை... மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் காற்றுடன் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தில் பல இடங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு- வீடியோ
சென்னை: சென்னையில் காற்றுடன் கூடிய மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தமிழகத்தில் வெப்பசலனம் காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதையடுத்து சென்னையில் கடந்த 4 நாட்களாக கடும் வெயில் இல்லாமல் மிதமான வானிலை நிலவியது.

இன்று மாலை முதல் சென்னையில் மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்று வீசியது. இதையடுத்து சென்னை முகப்பேர், அண்ணா நகர், கோயம்பேடு, போரூர், வளசரவாக்கம், வடபழனி, கிண்டி, அசோக் நகர் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. பெரும்பாலான வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.












Click it and Unblock the Notifications