For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாம்பனில் பலத்த சூறைக்காற்று.. சென்னை, மதுரை ரயில்கள் நிறுத்தம்!

பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசுவதை தொடர்ந்து சென்னை, மதுரை ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசுவதை தொடர்ந்து சென்னை, மதுரை ரயில்கள் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டுள்ளன.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நீலகிரி, நெல்லை, கோவை, தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் பாம்பன், எண்ணூர், நாகை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட துறைமுகங்களில் நேற்று ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

Chennai and Madurai trains have been halted in Pamban after a heavy wind

வங்கதேசம் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன்காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பாம்பனில் பலத்த சூறைக்காற்று வீசி வருகிறது. இதன்காரணமாக சென்னை- ராமேஸ்வரம் மற்றும் மதுரை - ராமேஸ்வரம் ரயில்கள் பாம்பனில் நிறுத்தப்பட்டுள்ளது.

English summary
Chennai and Madurai trains have been halted in Pamban after a heavy wind.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X