ராம்குமார் விவகாரம்... 'மேன்சன்'களில் கிடுக்கிப்பிடி... துருவித் துருவி விசாரிக்கும் நிர்வாகங்கள்
சென்னை: சுவாதி கொலையாளி சென்னை சூளைமேடு பகுதியில் மேன்சன் ஒன்றி தங்கியிருந்தது தெரிய வந்ததையடுத்து, அனைத்து மேன்சன்களிலும் அங்கு தங்கியிருப்பவர்கள் குறித்த தெளிவான விவரங்களைப் பெறும் வேலையை நிர்வாகத்தினர் முடுக்கி விட்டுள்ளனர்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த மாதம் 24ம் தேதி இன்போசிஸ் ஊழியர் சுவாதி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ராம்குமார், சுவாதியின் வீடு இருந்த அதே சூளைமேடு பகுதியில் மேன்சன் ஒன்றில் தங்கியிருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து மேன்சன்களிலும் நிர்வாகத்தார், அங்கு தங்கியிருப்போரின் தெளிவான முழு விபரங்களைப் பெறும் பணியை தொடக்கியிருப்பது தெரிய வந்துள்ளது.

சென்னை வருகை...
வேலை வாய்ப்பு, கல்வி எனப் பல்வேறு காரணங்களுக்கு தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும் சென்னை வந்து தங்கியிருப்போர் ஏராளம். இவர்களில் பெண்களுக்கு என பரவலாக ஹாஸ்டல்கள் காணப்படுகின்றன.

ஹாஸ்டல்...
ஆனால், ஆண்களுக்கு இது போன்று உணவு வசதியுடன் ஹாஸ்டல் வசதி அவ்வளவாக இல்லை. பேச்சுலர்களுக்கு தனியாக வீடு வாடகைக்கு தருவதற்கும் வீட்டு உரிமையாளர்கள் பெரும்பாலும் விரும்புவதில்லை.

மேன்சன்கள்...
எனவே, இவ்வாறு குடும்பத்தைப் பிரிந்து சென்னை வரும் ஆண்களுக்கு மேன்சன்கள் தான் வரப்பிரசாதமாக அமைகின்றன. ஏறக்குறைய இவையும் ஹாஸ்டல் போன்றவை தான் என்றாலும், உணவு வசதி இங்கு ஏற்படுத்தித் தரப்படுவதில்லை. ஹோட்டல் போன்று அறையை மட்டும் மாத வாடகைக்கு எடுத்துக் கொண்டு, உணவை கடையில் வாங்கி சாப்பிட்டுக் கொள்ள வேண்டும்.

போலீஸ் உத்தரவு...
இதனால், பெரும்பாலும் ஒரு அறையில் தங்கி இருப்பவர்களின் விபரங்கள் மற்றவர்களுக்குத் தெரிய வருவதில்லை. ஆனால், இவ்வாறு அங்கு தங்கி இருப்பவர்களின் தெளிவான முழு விபரத்தையும் மேன்சன் நிர்வாகத்தினர் பெற்று வைத்திருக்க வேண்டும் என்பது போலீசாரின் உத்தரவு. ஆனால், இது பெரும்பாலான மேன்சன்களில் முறையாக பின்பற்றப்படுவதில்லை.

சுவாதி வழக்கு...
ஆனால், சுவாதி கொலை வழக்கில் மேன்சனில் உடன் தங்கியிருந்தவர் மூலமாகவே ராம்குமார் குறித்த துப்பு கிடைத்தது. அப்போது அங்கிருந்த ராம்குமாரின் முகவரியை வைத்தே, கொலையாளியை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.

உண்மை விபரங்கள்...
இதன் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் உள்ள மேன்சன்களில் தங்கியிருப்போர் குறித்த தெளிவான விவரங்களை பெறும் முயற்சியில் நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேன்சன்களில் தங்கியிருப்போர் தங்களது நிலையான முகவரி, கல்வித்தகுதி, வேலை அல்லது கல்வி கற்கும் இடம் போன்றவற்றின் தகவல்களைத் தரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications