கடல் காற்று பலமாக வீசும்.. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் தமிழகம், புதுச்சேரி மீனவர்கள் எச்சரிக்கையுடன் கடலுக்கு செல்ல வேண்டும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
கடலில் மணிக்கு 35 முதல் 40 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பலத்த காற்று வீசும் என்பதால் வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications