எல்லா பணிகளிலும் மகளிரே.. சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள்!
சென்னையில் பெண்களே நிர்வகிக்கும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 2 மெட்ரோ ரயில் நிலையங்களை அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்டு பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளைக் கவரும் வகையில் சிறப்பான சேவையை வழங்கி வருகிறது.

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பெண்கள் முன்னேற்ற செயல்பாட்டின் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை ஜூலை 31 முதல் அணைத்துப் பெண்கள் ரயில் நிலையமாக அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ரயில் நிலையத்தில், டிக்கெட் கொடுப்பது போன்ற மேலாண்மை பணிகள், பயணிகள் பரிசோதனை, கண்காணிப்பு பணி, துப்புரவு பணிகள் என அனைத்து பணிகளையும் பெண்களே செய்கிறார்கள் என்று அறிவித்துள்ளது.
இந்த ரயில் நிலையத்தில் பெண்களுக்காக ஏற்கெனவே பல வசதிகளும் சிறப்பு அம்சங்களும் செய்யப்பட்டுள்ளன. ஷெனாய் நகர் ரயில் நிலையத்தை இரண்டு ஷிஃப்ட்டுகளில் மொத்தம் 15 பெண்கள் நிர்வகித்துவருகின்றனர் என்று தெரிவித்துள்ளது.
அதே போல, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் மிகவும் பரபரப்பான ரயில் நிலையமான கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அனைத்து பெண்கள் ரயில் நிலையமாக செயல்படும் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் ஷெனாய் நகர், கோயம்பேடு ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்து பெண்கள் ரயில் நிலையங்களாக செயல்பட்டு வருகின்றன.
சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் ஏற்கெனவே பெண்களுக்கு சிறப்பு ரயில் இயக்கி வருகிறது. பெண்கள் பாதுகாப்புக்காக மெட்ரோ ரயிலிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கண்காணிப்பு கேமிராக்களை நிறுவியுள்ளது. அதே போல, ஏதேனும் அவசரம் என்றால் பயணிகள் ரயிலை இயக்குபவருடன் பேச முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் 34 'ஹார்டு டிஸ்க்குகளை திருடியவர்கள் குறித்து புதிய தகவல்கள் -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications