சென்னையில் பயங்கரம்... சிறுமிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர் பலாத்காரம்
சென்னையில் 10 -ஆம் வகுப்பு சிறுமிக்கு மது, போதை மருந்துகள் கொடுக்கப்பட்டு தொடர் பலாத்காரம் செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: சென்னையில் 10-ஆம் வகுப்பு மாணவிக்கு மது, கஞ்சா கொடுத்து தொடர்ந்து பலாத்காரம் செய்தவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னையில் 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி, அவர் வசிக்கும் அக்கம்பக்கம் வீட்டு இளைஞர்களுடன் நட்பு ரீதியில் பழகி வந்தார். இந்நிலையில் அவருக்கு மது, கஞ்சா கொடுத்து அந்த இளைஞர்கள் பழக்கப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுமியை திருவள்ளூருக்கு அவரது பெற்றோருக்கு தெரியாமல் அழைத்து சென்றனர். அங்கு ஓரிடத்தில் அடைத்து வைத்து சிறுமியை 7 இளைஞர்கள் தொடர்ந்து பலாத்காரம் செய்தனர்.

கஞ்சா கொடுத்து
அண்மையில் அந்த சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. அவரது பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மது, கஞ்சா எடுத்துக் கொண்டதை சிறுமி ஒப்புக் கொண்டார்.

7 பேரிடம் விசாரணை
இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். சிறுமியிடம் மேலும் விசாரித்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதை கூறினார். இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரின்பேரில் போலீஸார் 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பலாத்காரம் செய்தது
பிடிப்பட்டவர்கள் அனைவரும் 18 வயதே நிரம்பிய இளைஞர்கள் ஆவர். மேலும் 5 பேரை தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அந்த சிறுமி வீட்டை விட்டு வெளியேறிவிட்டதாகவும் திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்தபோது அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் தான் பலாத்காரம் செய்யப்பட்டதாக சிறுமி கூறியதாகவும் தெரிகிறது.

பரபரப்பு
இதையடுத்து 7 பேரை கைது செய்ததாகவும், விசாரணை மேலும் நடைபெற்று வருகிறது என்றும் மற்ற தகவல்கள் கூறுகின்றன. கஞ்சா, மது கொடுத்து சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.











Click it and Unblock the Notifications