For Daily Alerts
Just In
அனிதாவுக்கு நீதி கோரி தொடர் போராட்டம்.. நந்தனம் கல்லூரிக்கு விடுமுறை
அனிதாவின் தற்கொலைக்கு நியாயம் கேட்டு, சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: அனிதாவின் தற்கொலைக்கு நீதி கேட்டு சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வால் மருத்துவ கனவு தகர்ந்ததால் மனமுடைந்த அனிதா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு அரசுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து அரசியல் அமைப்புகள், மாணவர்கள் அமைப்புகள் கடந்த 4 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று முதல் தமிழகம் மற்றும் புதுவையில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று 2-ஆவது நாளாகவும் தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை நந்தனம் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் இன்று அந்த கல்லூரி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Chennai Nandanam college students protest over Anitha suicide issue. The college management announces today holiday for that college.