சென்னையில் இருந்து நெல்லைக்கு சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை எழும்பூரிலிருந்து நெல்லைக்கு ஜனவரி 13 ந்தேதி சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லைக்கும், சென்னை சென்டிரலில் இருந்து மும்பை சி.எஸ்.டி.க்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-
எழும்பூர்-நெல்லை ‘சுவிதா' சிறப்பு ரயில் (வ.எண்.00630) எழும்பூரில் இருந்து ஜனவரி 13-ந் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு நெல்லை சென்றடையும். இதற்கான முன்பதிவு இன்று தொடங்குகிறது.
சென்னை சென்டிரல்-மும்பை சி.எஸ்.டி. சிறப்பு ரயில் (வ.எண்.06158) சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு நாளை இரவு 10.35 மணிக்கு மும்பை சி.எஸ்.டி. சென்றடையும். இந்த ரயிலுக்கான முன்பதிவு ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications