சென்னையில் 3-வது நாளாக தொடரும் அவலம்... ஏ.டி.எம்., பெட்ரோல் பங்குகளில் நிரம்பிவழியும் கூட்டம்
சென்னை: சென்னையை உருக்குலைத்த வரலாறு காணாத மழை வெள்ளம் மக்களின் அன்றாட வாழ்க்கையை மிக மோசமாக முடக்கியும் வருகிறது. ஏ.டி.எம்.கள் செயல்படாததாலும் பெட்ரோல் பங்குகளில் டீசல், பெட்ரோல் கிடைக்காததாலும் சென்னைவாசிகள் சொல்லி மாளமுடியாத துயரில் இருக்கின்றனர். மாடாய் உழைத்து சம்பாதித்த பணம் மெஷினில் மாட்டிக் கிடக்க மானத்தைவிட்டு கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் சென்னை மக்கள்.

சென்னை நகருக்குள் ஊடுருவிய பெருமழை வெள்ளத்தால் வீடுகளை, கடைகளை, அலுவலகங்களை, ஏ.டி.எம்.களை என அனைத்தையும் ஒரேயடியாக மூழ்கடித்துச் சென்றுவிட்டது. வெள்ளம் வந்த வழி திரும்பிவிட்டது.
மழையோ போக்கு காட்டிக் கொண்டிருக்கிறது... மெல்ல தலைகாட்டி உணவு, உடைக்கு ஏற்பாடு செய்யலாம் என எட்டிப்பார்க்கும் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி பாடாய்படுத்துகிறது பணம்... ஆம் ஏ.டி.எம். கிளைகள் பெரும்பாலானவை செயல்படவில்லை. செயல்படும் இடங்களில் பல மணிநேரம் காத்திருந்தாக வேண்டிய நிலை. மாடாய் உழைத்த பணம் இப்படி மெஷினில் சிக்கிக் கொள்ள உடனடி தேவைகளுக்காக 1,000 2,000 கைமாத்தாக கடனுக்கு கையேந்தும்நிலை..

இதேபோல் பெட்ரோல், டீசல் கிடைக்கும் பங்குகளை தேடி தேடி ஓய்ந்து போகும் நிலை... அப்படி ஸ்டாக் வைத்திருக்கும் பங்குகளிலும் பல மணிநேரம் காத்திருப்பு..
கையில் கிடைத்த காசைக் கொண்டு பால் உள்ளிட்ட பொருட்களை வாங்கப் போனால் அங்கும் கூட்டம்... விலையோ மலைக்க வைக்கிறது..
அரசுதான் உதவி மையங்களை திறக்கவில்லை.... இதனால் தேடித் தேடி வரும் தன்னார்வலர்களுக்காகத்தான் காத்திருக்க வேண்டிய அவலம்..
இப்படி தொடர்ந்தும் 3-வது நாளாக வெள்ளம் சுமத்திவிட்டு சென்ற பேரவலத்தில் இருந்து மீளமுடியாதவர்களாக தத்தளித்து வருகின்றனர் சென்னைவாசிகள்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications