வீணை காயத்திரிக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் கைது
சென்னை: தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழக துணை வேந்தர் வீணை காயத்திரியின் அறையை சூறையாடி ,அவருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
வியாசர்பாடியைச் சேர்ந்த பழனிகுமார் என்பவர் தமிழ்நாடு இசைக் கல்லூரியில் 2010 முதல் 2013ம் ஆண்டு வரை படித்துவந்தார். பல்கலைக்கழகத்திற்கு சரியாக வராத அவரை பல்கலைக்கழக நிர்வாகம் டிஸ்மிஸ் செய்தது.
இதனையடுத்து பழனிகுமாருக்கும் , அவரது நண்பர் விக்னேஷ்க்கும் பல்கலைகழக நிர்வாகம் பட்டமளிப்பு விழா அழைப்பிதழை அனுப்பவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பழனிக்குமார், கடந்த 24ம் தேதி சென்னை ராஜ அண்ணாமலை புரத்திலுள்ள தமிழ்நாடு இசைப் பல்கலைக்கழகத்தில், ஐந்து அறைகளை அடித்து நொறுக்கினார்.
இதில் அப்பல்கலைக்கழக துணைவேந்தர் அறையும் இவரால் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. மேலும் அவர் துணை வேந்தருக்கு கொலை மிரட்டல் கடிதத்தையும் எழுதி வைத்துச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த துணைவேந்தர் காயத்திரி, மாநகர காவல் ஆணையரிடம் இது குறித்து புகார் அளித்தார். முதல்வர் ஜெயலலிதாவையும் சந்தித்து நடந்த சம்பவத்தை நேரில் விளக்கினார்.
செய்தியாளர்களிடம் பேசிய வீணை காயத்ரி , எனக்கு எதிரிகள் யாரும் இல்லை. கொலை மிரட்டல் தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார். தனிப்பட்ட முறையில் யார் மீதும் சந்தேகம் இல்லை. சம்பவம் தொடர்பாக எப்.ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல், ஒழுக்கமின்மை, பல்கலை விதிகளுக்கு எதிராக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன். சிசிடிவி காட்சிகள் கடந்த ஒரு வாரமாக பதிவாகவில்லை என்று கூறினார்.
இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் அப்பல்கலைக்கழகத்தின் முன்னால் மணவரான பழனிக்குமாரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications