சென்னையில் சட்டவிரோதமாக கூடினால் கைது, கடும் நடவடிக்கை.. போலீஸ் எச்சரிக்கை
சென்னை: சென்னை கடற்கரையில் சட்டவிரோதமாக கூடினால் கைது செய்யப்படுவார்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.
ஈழப் படுகொலை நினைவேந்தலுக்கு அனுமதி கோரி தீபா விண்ணப்பித்துள்ள நிலையில் இந்த தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.

மெரீனா ஜல்லிக்கட்டு புரட்சியைத் தொடர்ந்து தற்போது கடற்கரையில் யாரையும் கூட விடாமல் கண் கொத்திப் பாம்பாக காவல் காத்து வருகிறது போலீஸ். இந்த நிலையில் தற்போது புதிய தடை உத்தரவை காவல்துறை பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து காவல்துறை பிறப்பித்துள்ள உத்தரவில்,
சென்னை மெரினா கடற்கரையில் விதிமுறைகளை மீறி குழுமினாலோ, கூட்டம் நடத்த முற்பட்டாலோ நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையின் அழகை பாதுகாக்கும் வகையில் மெரினா கடற்கரையில் கூட்டம் மற்றும் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி இல்லை. சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டவிதிகளுக்கு மாறாக மெரினாவில் குழுவாக கூடுவது. கூட்டங்கள் நடத்துவது சட்டவிரோதமாகும். சென்னை மாநகர காவல் சட்டவிதி 41-ஐ மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications