அடுத்த 24 மணி நேரம் வெளியில் போனா குடை எடுத்துட்டு போங்க... கனமழைக்கு வாய்ப்பிருக்காம்!
தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை : வளிமண்டல மேல்அடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரலவாக மழை பெய்து வருவதால் மாநிலத்தில் நிலவிய தண்ணீர் பஞ்சம் நீங்கி நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இரண்டு நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

கர்நாடகா மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் கனமழை தொடர்வதால் காவிரி நீர் பிடிப்புப் பகுதிகளில் இருந்து தமிழகத்திற்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் உள்ள மேட்டூர், பவானி, முல்லைப்பெரியாறு உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடகாத்தையொட்டியுள்ள தமிழக எல்லையில் வளிமண்டல மேல் அடுக்கில் சுழற்சி ஏற்பட்டுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கூறியுள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் அவ்வபோது மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் பரவலாக பெய்து வருவதால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பருவமழை பொய்த்து தண்ணீர் பஞ்சத்தை கண்ட சென்னை மக்கள் நிம்மதியடைந்துள்ளனர். இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்திற்கும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம்.
-
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications