நிவாரண பணிகளுக்காக படகுகள், மருத்துவ உபகரகணங்களுடன் சென்னை வந்தது "ஐராவத்" போர்க்கப்பல்
சென்னை: வெள்ளத்தால் மூழ்கியுள்ள சென்னையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் நேற்று சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
வரலாறு காணாத பெருமழை வெள்ளத்தால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையின் எந்த பகுதியையும் வெள்ளம் விட்டு வைக்கவில்லை.

அனைத்து பகுதிகளிலும் பல அடி உயரத்துக்கு ஆளையே மூழ்கடிக்கும் அளவுக்கு வெள்ளம் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த வெள்ளத்தால் ஒட்டுமொத்த சென்னையுமே தத்தளித்து வருகிறது. லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகின்றனர்.
இந்த மக்களை மீட்பது மற்றும் நிவாரணப் பகுதிகளில் முப்படையினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் மீட்புப் பணிகளுக்காக கடற்படையின் ஐராவத் போர்க்கப்பல் நேற்று இரவு சென்னை துறைமுகம் வந்தடைந்தது.

மீட்பு பணிகளுக்கான படகுகள், மருத்துவ உபகரணங்களுடன் இப்போர்க்கப்பல் வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு-புதுச்சேரி கடற்படை அதிகாரி அலோக் பட்நாகர் கூறுகையில், கடற்படைக்கு சொந்தமான ஐராவத் கப்பல் மீட்பு பணிக்கு வந்துள்ளது. அதில் மீட்பு படகுகள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
Kovilpatti Sattur ViNgr வர விரும்பிணால்.அண்ணாமலை டிரான்ஸ்போர்ட் சார்பாக இலவச பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது 9842151207
#CHENNAIRAINS
— MediaExpress (@_MediaExpress) December 3, 2015 தேவையான மருத்துவ உதவிகள் செய்யவும் கடற்படை தயாராக உள்ளது. 7 படகுகள் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. அதன் மூலம் ஏராளமானவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்படுவர் என்றார்.
-
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
கோடைக்கு நடுவே கொட்டும் குளுகுளு மழை.. இந்த மாவட்டங்களில் ஜில் கிளைமேட் தான்.. வானிலை மையம் அலர்ட் -
கோவை, நீலகிரிக்கு பறந்த அலர்ட்.. கொட்டப்போகும் மழை! வானிலை மையம் கொடுத்த அப்டேட்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக












Click it and Unblock the Notifications