'ஆபரேஷன் வெட்டிங் ஹால்'- சென்னையில் 26/11 போல் தாக்குதல் நடத்த திட்டமிட்ட தீவிரவாதிகள்!
சென்னை: மும்பை பாணியில் சென்னையில் முக்கிய இடங்கள் மீது பயங்கர தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருந்ததாக திடுக்கிட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சி அமைப்பும் உரிய நேரத்தில் இந்த தாக்குதல் சதித் திட்டத்தை கண்டறிந்து முறியடிக்காமல் போயிருந்தால் மும்பையைப் போல பயங்கரவாத தாக்குதலுக்கு சென்னையும் உள்ளாகி இருக்கும் என கூறப்படுகிறது.
சென்னையில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மேஜர் சமீர் அலி, மேஜர் இக்பால் என்ற பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகளை அந்நாட்டின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. நியமித்தது. இவர்கள் இருவரும் இலங்கை தலைநகர் கொழும்பில் பணியாற்றிய தூதரக அதிகாரி அமீர் சுபைர் சித்திக்கிடம் சதியை அரங்கேற்றும் பொறுப்பை ஒப்படைத்தனர்.

அருண் செல்வராசன், ஷாகிர் ஹூசைன்
சித்திக் முதலில் இரண்டு இலங்கை நாட்டவரை சென்னை அனுப்பி உளவு பார்க்க வைத்தான். அந்த இருவர்தான் அருண் செல்வராஜன் மற்றும் ஷாகிர் ஹூசைன்.. இவர்கள் சென்னைக்குள் ஊடுருவி மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உட்பட குண்டுவெடிப்பை நடத்துவதற்கு வாய்ப்புள்ள மிக முக்கியமான இடங்களை வேவு பார்த்து தகவல்களைத் திரட்டினர். அருண் செல்வராஜூக்கு சிக்கல் ஏற்பட்டால் சித்திக் மேலும் பலரை அனுப்பி வைக்க திட்டமிட்டிருந்தான்.

கடல் வழியே வெடிபொருட்கள்
இந்த தாக்குதல் நடத்துவதற்கான வெடிபொருட்களை இலங்கையின் மன்னாரில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்துக்கு கடத்திக் கொண்டு வர படகுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.

ஐ.எஸ்.ஐ. திட்டம் இதுதான்...
சென்னை நகரின் மக்கள் நெரிசலாக நடமாடும் இடங்கள் உள்ளிட்ட பல இடங்களில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர்.. அவர்களது நோக்கமே ஒட்டுமொத்த பாதுகாப்பு நிர்வாகத்தையே முடக்கிப் போடுவது என்பதுதான்..
அதாவது இப்படி குண்டுவெடிப்புகளை நடத்திவிட்டு அதில் பாதுகாப்பு தரப்பினர் கவனத்தை செலுத்தும் போது பிற தீவிரவாதிகள் ஏகே-47 ரக துப்பாக்கிகள் முனையில் சென்னை நகரை கைப்பற்றி பொதுமக்கள், வெளிநாட்டு பயணிகளை பிணைக் கைதிகளாக பிடித்து தாக்குதல் நடத்துவது என்பது ஐ.எஸ்.ஐ. திட்டம்.

5 தீவிரவாதிகள்.. பெங்களூரு டூ சென்னை
இதற்காக மொத்தம் 5 பேரை சென்னைக்கு அனுப்ப திட்டமிட்டிருந்தனர். இருவர் பாகிஸ்தான் நாட்டவர்... எஞ்சிய மூவர் மாலத்தீவு நாட்டைச் சேர்ந்தவர்கள்..
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இருவரை இலங்கை தூதரகத்தில் பணியாற்றி சித்திக் தயார் நிலையில் வைத்திருந்தான்.. முதலில் அவர்களை பெங்களூருவுக்கு அனுப்பி வைத்து அங்கிருந்து சென்னைக்குள் ஊடுருவச் செய்ய திட்டமிட்டிருந்தனர்.. அதுவும் முதலில் மாலத்தீவு சென்றுவிட்டு அங்கிருந்து மூன்று தீவிரவாதிகளுடன் இணைந்து அப்படியே பெங்களூருக்குள் ஊடுருவி கடைசியாக சென்னையில் ஒன்றிணைவது இவர்கள்து ப்ளான்.

கடைவீதிகள் டூ அமெரிக்கா தூதரகம்
இந்த 5 பேருக்கும் கொழும்பு மற்றும் மாலத்தீவில் பயிற்சி அளிக்கப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருந்தனர்.. சென்னை கடைவீதிகளில் தாக்குதலைத் தொடங்கி கடைசியாக அமெரிக்கா தூதரகத்தை தகர்ப்பது என்பது ஐ.எஸ்.ஐ. போட்டுக் கொடுத்த திட்டம்.

ஆபரேஷன் வெட்டிங் ஹால்
இந்த திட்டத்துக்கு வைக்கப்பட்ட பெயர் 'ஆபரேஷன் வெட்டிங் ஹால்'... சென்னை நகரையே நிலைகுலைய வைக்கும் வகையிலான தாக்குதலை நடத்துவதுதான் ஐ.எஸ்.ஐ. அமைப்பின் ஒற்றை இலக்காக இருந்தது. இதன் மூலமாக தென்னிந்தியாவுக்குள் கால் பதித்துவிட முடியும் என்று நம்பிக் கொண்டிருந்தது ஐ.எஸ்.ஐ. ஆனால் உரிய நேரத்தில் சென்னை போலீசாரும் தேசிய புலனாய்வு ஏஜென்சியும் கண்டுபிடித்து மிகப் பெரிய சதியை முறியடித்திருக்கின்றனர்.
தப்பியது சென்னை!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications