தி சென்னை சில்க்ஸ்: பாதுகாப்பு கருதி தீயணைப்பு வாகனங்கள் வெளியேற்றம்!
சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டடம் இடிந்து விழுவதால் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனங்கள் வெளியேற்றப்படுகின்றன.
சென்னை: சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தால் கட்டடத்தின் பல பகுதிகளும் இடிந்து விழுகின்றது. இதனால் பாதுகாப்பு கருதி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்படுகின்றன.
தி சென்னை சில்க்ஸில் ஏற்பட்ட தீ விபத்து இரண்டாவது நாளாக இன்றும் நீடிக்கிறது. இதனை அணைக்க நேற்று முதல் 60க்கும்மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களில் 400க்கும் மேற்பட்ட ஊழியர்கள ஷிப்ட் முறையில் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
வெப்பம் தாங்க முடியாமல் கடையில் உள்ள கண்ணாடித் துண்டுகள் நேற்று முதல் சிதறி வருகின்றன. இந்நிலையில் கட்டடத்தின் பல பகுதிகளும் வெப்பத்தை தாக்குப்பிடிக்க முடியாமல் ஆங்காங்கே இடிந்து விழுகிறது.
இதனால் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட வாகனங்கள் வெளியேற்றப்பட்டன. கட்டடம் இடிந்து விழத் துவங்கியதால் தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.