மோடி சென்னை வருகைக்கு எதிர்ப்பு- போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாரதிய ஜனதா கட்சி தமிழக மீனவர் நலன், ஈழத் தமிழர் பிரச்சனை பற்றி தமது தேர்தல் அறிக்கையில் எதுவும் தெரிவிக்கவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு எதிராக போராட்டம் நடத்த மாணவர்கள், தமிழீழ ஆதரவு அமைப்பினர் முடிவு செய்தனர்.
இதற்காக சென்னை கிண்டி அருகே இருந்து விமானம் நிலையம் நோக்கி போராட்டம் நடத்த மாணவர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications