சென்னை புறநகரில் கனமழை... 24 மணிநேரத்திற்கு மழை நீடிக்குமாம்- சொல்கிறார் ரமணன்
சென்னை: சென்னையில் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்துள்ளதால் சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. இலங்கையின் மேலடுக்கில் இருந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரியில் நிலை கொண்டுள்ளதால்,அடுத்த 24 நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் கடந்த இரு தினங்களாக சென்னையின் நகர் பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் சாரல் மழையும் அவ்வப்போது கனமழையும் பெய்து வருகிறது. இன்று காலையில் வெயிலும் மேகமூட்டமுமாய் மாறி மாறி கண்ணாமூச்சி ஆடி வந்த நிலையில், குரோம்பேட்டை, கிண்டி, மீனம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே மழைநீர் தேங்கியது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆறுமுகநேரி பகுதியில் கன மழை பெய்தது. இம்மழை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என அப்பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.விருதுநகர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதைத் தொடர்ந்து விவசாயிகள் நெல் நடவுப் பணிகளை தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை விருதுநகர் மற்றும் சுற்றுப் பகுதிகளில் கன மழை பெய்ததில், மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. இன்றும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இலங்கையின் மேலடுக்கில் இருந்த சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கை மற்றும் குமரியில் நிலை கொண்டுள்ளதால்,அடுத்த 24 மணித்தியாலத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

காலை 8 மணிமுதல் முடிந்த 24 நேரங்களில் பாபநாசத்தில் 8 சென்டிமீட்டர் மழையும்,மகாபலிபுரத்தில் 9 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அரபிக் கடலில் மையம் கொண்டுள்ள சபாலா புயலால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை எனவும் சென்னை வானிலை அமையம் தெரிவித்துள்ளது. தீவிர புயலாக உள்ள சபாலா, அதி தீவிர புயலாக மாற வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications