ராஜஸ்தானில் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு
ராஜஸ்தானில் ஆய்வாளர் பெரியபாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை இணை கமிஷனர் ஆய்வு செய்து உள்ளார்.
ஜோத்பூர்: ராஜஸ்தானில் கொள்ளையர்களால் ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் சென்னை மேற்கு மண்டல இணை கமிஷனர் சந்தோஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
சென்னையில் உள்ள கொளத்தூர் நகைக்கடை ஒன்றில் கடந்த மாதம் 3.5 கிலோ தங்கத்தை கொள்ளையடித்துச் சென்ற கும்பலைப் பிடிக்க சென்னையச் சேர்ந்த தனிப்படை ஒன்று ராஜஸ்தான் மாநிலத்தில் விசாரணை நடத்தியது.

அதில் கொள்ளையர்கள் பதுங்கி இருக்கும் பகுதியை நெருங்கியபோது, போலீஸாருக்கும் கொள்ளையர்களுக்கும் நடந்த துப்பாக்கிச்சூட்டில் காவல் ஆய்வாளர் பெரியபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
பெரிய பாண்டியனின் உடல் சென்னைக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இன்னொரு ஆய்வாளரான முனிசேகரனும் கடுமையான காயம் அடைந்ததால் அவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், சம்பவம் குறித்து தகவல் தெரிந்ததும் சென்னை மேற்கு மண்டல இணை ஆணையர் சந்தோஷ் குமார் மற்றும் தனிப்படை போலீஸார் சிலர் நேற்று காலை விமானம் மூலம் ராஜஸ்தான் கிளம்பிச் சென்றார். நேற்று ராஜஸ்தான் மாநில காவல்துறையினருடன் கொள்ளையர்களை பிடிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார்.
ஆய்வாளர் பெரிய பாண்டியன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் இன்று மாலை இணை ஆணையர் சந்தோஷ் குமார் ஆய்வு நடத்தி உள்ளார். இந்நிலையில், பெரியபாண்டியனை சுட்ட கொள்ளை கூட்ட தலைவன் நாதுராமின் வலதுகரமாக செயல்பட்ட அவரது கூட்டாளி தினேஷ் செளத்ரி தற்போது ராஜஸ்தானில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications