சென்னையில் இன்று மழை எப்படி இருக்கும்? நார்வே வானிலை மையம் அறிவிப்பு!

சென்னையில் இன்று அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: இன்று அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. பிற்பகலில் சாரல் மழை தீவிரமடையும் என்றும் நார்வே வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகம் முழுவதும் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது.

காவிரி டெல்டா பகுதியில் கொட்டிய கனமழையால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

நேற்று பிற்பகலில் மழை

நேற்று பிற்பகலில் மழை

சென்னையில் நேற்று பிற்பகலுக்குப் பிறகு நேற்று மாலை வரை கனமழை பெய்தது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது.

இரவு முதல் மழையில்லை

இரவு முதல் மழையில்லை

ஆனால் நேற்றிரவு சென்னையில் மழை ஓய்ந்திருந்தது. பல இடங்களில் தேங்கி நின்ற மழை நீர் வடிந்துள்ளது.

அச்சப்படும் அளவுக்கு இருக்காது

அச்சப்படும் அளவுக்கு இருக்காது

இந்நிலையில் சென்னையில் இன்று பல இடங்களில் லேசான சாரல் மழை தான் இருக்கும் என நார்வே வானிலை மையம் கூறியுள்ளது. அச்சப்படும் அளவுக்கு மழை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிதமான மழை

மிதமான மழை

அதேநேரத்தில் பிற்பகலில் பல இடங்களில் கனத்த சாரல் மழை இருக்கும் என்றும் நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் மிதமான மழையாக கூட மாறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது

சாரல் மழை நீடிக்கும்

சாரல் மழை நீடிக்கும்

இரவிலும் சாரல், தூறல் தொடரும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. நார்வே நாட்டின் வானிலை மைய கணிப்புகள் துல்லியமாக இருப்பதால் மக்களின் நம்பிக்கையை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+