சரமாரியாக லஞ்சம்.. எஸ்.ஐ. வேளச்சேரி கலைச்செல்வி கையும் களவுமாக கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சரமாரியாக லஞ்சம் வாங்கிக் குவித்து வந்த சென்னை வேளச்சேரி பெண் சப் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வியை லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர்.
சென்னை, வேளச்சேரியில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் கலைசெல்வி. இவர் பெருமளவில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸுக்குப் புகார்கள் வந்தன.
இதையடுத்து அவரை வசமாக பிடிக்க லஞ்ச ஒழிப்புப் போலீஸார் பல்வேறு வலைகளை விரித்து வைத்திருந்தனர். இந்த நிலையில் ஒரு வழக்குத் தொடர்பாக இன்று லஞ்சம் பெற்றுள்ளார் கலைசெல்வி. இதையடுத்து அவரை லஞ்ச ஒழிப்புப் போலீஸ் படையினர் கையும் களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.
கலைச்செல்வியிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications