தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி ஜெயலலிதா பிரதமருக்குக் கடிதம்
சென்னை: இலங்கை சிறையில் உள்ள ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அவர் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 14 ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை விடுதலை செய்யப்படும் போது, அவர்களது படகுகளை இலங்கை அரசு விடுவிப்பது இல்லை. அந்த வகையில், தமிழக மீனவர்களுக்குச் சொந்தமான 50 படகுகள், இலங்கை கடற்கரையில் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை உடனடியாக அவர்களிடம் திருப்பி ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நீண்ட நாட்களாக அந்த படகுகள் கடற்கரையோரங்களில் நிறுத்தப்பட்டிருப்பதால், பழுதடைந்து, சேதமடைய வாய்ப்புள்ளது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமே பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
எனவே, இவ்விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு, தூதரக அதிகாரிகள் மூலம், 14 மீனவர்களையும், அவர்களுக்குச் சொந்தமான 50 படகுகளையும் உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications