இன்றும் தொடருது “குழந்தைத் தொழிலாளர்கள்” முறை - முத்துப்பேட்டையில் 5 குழந்தைகள் மீட்பு
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் 5 குழந்தைத் தொழிலாளர்கள் காவல்துறையினரால் மீட்கப்பட்டனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் கடை மற்றும் ஹோட்டல்களில் வேலை பார்த்து வரும் குழந்தை தொழிலாளர்களை மீட்கும் விதமான சில தினங்களுக்கு முன்பு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மரியதாஸ், இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-.ன்ஸ்பெக்டர்கள் இராமானுஜம், பக்துவச்சலம், தர்மலிங்கம், நடராஜன், கள உதவியாளர் மகேஷ்வரி, குழந்தைகள் பாதுகாப்பு சமூக பணியாளர் மணிமாறன் ஆகியோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த அதிரடி சோதனையில் முத்துப்பேட்டை தெற்குக்காடு மற்றும் பல்வேறு பகுதியில் அவர்கள் அதிரடி சோதனையில் ஈடுப்பட்ட போது சிறுவர்கள் அய்யப்பன், சுக்திவேல், மணிகண்டன், சரண்யா, ஹரிஹரன் ஆகிய 5 குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
பின்னர் அவர்கள் அனைவரையும் முத்துப்பேட்டை காவல் நிலையம் கொண்டு வந்தனர். பிறகு பெற்றோர்களை வரவழைக்கப்பட்டு அவர்களிடம் அறிவுரை வழங்கி மீட்கப்பட்ட குழந்தை தொழிலாளர்களை ஒப்படைத்தனர்.