சீர்காழியில் ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்து 17 குழந்தைகள் காயம்!
Subscribe to Oneindia Tamil
நாகை: நாகை மாவட்டம், சீர்காழியில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றி சென்ற ஆட்டோ கவிழ்ந்து 17 குழந்தைகள் காயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ள விவேகானந்தா மெட்ரிக்குலேசன் பள்ளிக்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு ஆட்டோ ஒன்று 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தென்பாதியில் இருந்து 17 குழந்தைகளை ஏற்றி வந்துள்ளது.
அப்போது மழை நீர் தேங்கியிருந்த பள்ளத்தில் ஆட்டோ இறங்கியதில் ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் 17 பிள்ளைகள் காயம் அடைந்தனர். அதில் இரண்டு பேருககு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்ற பிள்ளைகளை அவரவர் பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று சிகிச்சை மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications