நேருவுக்கு அஞ்சலி.. பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி... காரைக்குடி பள்ளியில் குழந்தைகள் தின விழா
காரைக்குடி: காரைக்குடியில் உள்ள இராம. சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக நேற்று கொண்டாடப்பட்டது.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி, இராம.சு. இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா13.11.2015 அன்று நடைபெற்றது.
இவ்விழா தலைமையாசிரியர் பீட்டர் ராஜா தலைமையில் நடைபெற்றது. பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி அனைவரையும் வரவேற்றார். பட்டதாரி ஆசிரியர் கோமதி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
மாணவர்கள் மறைந்த பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்திற்கு மலரஞ்சலி செலுத்தினர். விழாவில் மாணவர்களின் நடனம், பாட்டு, பேச்சு ஆகிய கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
எட்டாம் வகுப்பு மாணவன் ஜெகதீஷ் தனித்திறன் நடிப்பில் நடித்துக் கட்டினான். விழாவை முன்னிட்டு பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப் போட்டி மாணவர்களுக்கு நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் அளவுகோல், பேனா, பென்சில் மற்றும் இனிப்பு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் ஜாக்குலின் கனிமொழி செய்திருந்தார். நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் சித்ரா நன்றி கூறினார்.