Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி - ப.சிதம்பரம் டைரக்ட் அட்டாக்

மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி என்று முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைமைப் பொருளாதார ஆலோசகர் மருந்துகள் கொடுத்தாலும், நோயாளியான மத்திய அரசு அதனை ஏற்க மறுப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

மத்திய அரசின் நடப்பாண்டுக்கான பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லியால் தாக்கல் செய்யப்பட்டது. 2019ஆம் ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்திடும் இறுதி பட்ஜெட் இதுவென்ற காரணத்தினால் அதிக எதிர்பார்ப்பினை கிளப்பியிருந்தது.

Chithambaram slams Central Govt

இந்நிலையில், மத்திய அரசின் இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவர், மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மக்கள் நலனுக்கானவை இடம் பெறவில்லை என்றார். மேலும் இது தேர்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட பட்ஜெட் என்றும் சிதம்பரம் குற்றஞ்சாட்டினார்.

ஜேட்லி தாக்கல் செய்த பட்ஜெட் 2018 மத்திய அரசின் இயலாமை தன்மையை காட்டுகிறது எனவும் அவர் கடுமையாக விமர்சினம் செய்துள்ளார். மேலும் மத்திய அரசு ஒரு மோசமான நோயாளி என்றும், தலைமை பொருளாதார ஆலோசகராக சிறந்த மருத்துவர்கள் இருந்தாலும், அவர்கள் அளிக்கும் மருந்துகளை ஏற்காமல் மத்திய அரசு தானாக மருந்தை உட்கொள்வதாகவும் சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய அரசின் நிலைமை மிக மிக மோசமான கட்டத்தை எட்டிக்கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+