ஜெ.உடல் நலம் விசாரிக்க அப்பல்லோ வந்தார் 'சோ' மகன் கார்த்திக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வரும் சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியின் மகன் கார்த்திக் இன்று இரவு வந்தார்.

ஜெயலலிதா உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த 22 ஆம் தேதி முதல் கிரீம்ஸ் ரோடு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு லண்டன் மருத்துவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Cho Ramaswamy son visits apollo hospital

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர். மத்திய அமைச்சர்கள், திரைத்துறையினர், பக்கத்து மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் என பல்வேறு தரப்பினரும் அப்பல்லோ வந்து, முதல்வருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்து செல்கின்றனர்.

சிகிச்சை பெற்று வரும் ஜெயலலிதாவை அவரது தோழி சசிகலா மற்றும் சசிகலா தம்பி ஜெயராமன் மனைவி இளவரசி ஆகியோர் கவனித்து வருகின்றனர். இவர்களைத் தவிர இதுவரை முதல்வரை யாரும் நேரில் பார்த்ததாக உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இளவரசியின் மகன் விவேக் இன்று இரவு அப்பல்லோ மருத்துவமனைக்கு வந்தார். பின்னர் இரவு 8.50 மணிக்கு மருத்துவமனையில் இருந்து புறப்பட்டார். அதே நேரம் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்து விசாரிக்க துக்ளக் ஆசிரியர் சோ ராமசாமியின் மகன் கார்த்திக் வந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+