வந்தாரய்யா கிறிஸ்துமஸ் தாத்தா வந்தாரய்யா...!
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
சகாய மாதா ஆலய பங்கு தந்தை அருட்திரு. வின்சென்ட் அமல்ராஜ் அவர்கள் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் பீட்டர் ராஜா அவர்கள் அனைவரையும் வரவேற்றார்.

பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கலந்து கொண்டு சிறப்பு சேரத்தனர்.
பள்ளி வளாகத்தில் கிறிஸ்துமஸ் குடில் அமைக்கப்பட்டிருந்தது. ஒன்பதாம் வகுப்பு மாணவி மணிமேகலை அமைதி மன்றாட்டு வசித்தார்.

ஏழாம் வகுப்பு மாணவி மார்த்தாள் இறை வசனம் வாசித்தார். ஒன்பதாம் வகுப்பு மாணவி ஐஸ்வர்யா பண்டைய காலத்தில் கிறிஸ்துமஸ் எவ்வாறு கொண்டாடினார்கள் என்பதை எடுத்துக் கூறினார்.

இவ்விழாவிற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா ஆடிப்பாடி மாணவர்களை மகிழ்வித்தது அருமையாக இருந்தது. மாணவர்களின் கலை நிகழச்சிகள் நடந்தது.

மாணவர்கள் மிகவும் உற்சாகமாக இவ்விழாவை கண்டு ரசித்தனர். பட்டதாரி ஆசிரியர் அருள்மேரி அவர்கள் நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர் விஜயலெட்சுமி விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.












Click it and Unblock the Notifications