சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தலைமறைவு... தனிப்படை அமைத்து தேடுகிறது போலீஸ்!
திரைப்பட இயக்குனர் சசிகுமார் மைத்துனர் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை : திரைப்பட இயக்குனர் சசிகுமார் மைத்துனர் தற்கொலை விவகாரத்தில் தலைமறைவாக உள்ள பைனான்சியர் அன்புச்செழியனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட இயக்குனர் சசிகுமாரின் மைத்துனரும் நெருங்கிய நண்பருமான அசோக்குமார் நேற்று சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை நடந்த வீட்டில் இருந்து போலீசார் அசோக்குமாரின் தற்கொலைக் கடிதத்தை கைப்பற்றியுள்ளனர். அதில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியதற்காக மிகவும் நெருக்கடியை சந்தித்து வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

மேலும் சசிகுமார் நல்லவர் என்றும், அவருக்கு பிறரால் துன்பம் மட்டுமே நேர்வதாகவும் அசோக் தெரிவித்திருந்தார். அன்புச்செழியனிடம் வாங்கிய கடனுக்காக மிகுந்த நெருக்கடியைத் தருவதாகவும், இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்துகொள்வதாகவும் அசோக்குமார் கடிதத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இந்த கடிதத்தின் அடிப்படையில் சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அசோக்குமார் தற்கொலையை அடுத்து அன்புச்செழியன் தலைமறைவாக உள்ளதாகத் தெரிகிறது. இதனையடுத்து அவரைத் தேடும் பணியில் சென்னை வளசரவாக்கம் போலீசார் ஈடுபட்டுள்ளனர். மேலும் அன்புச்செழியனை உடனடியாக கைது செய்ய தனிப்படை குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.
-
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம்












Click it and Unblock the Notifications